வேகம் பிடித்தோடும் பேருந்துகள்
சக்கரம் மாட்டிய தொட்டில்
காதலோ கருமமோ
தூங்காதவர்களை கட்டாயம் எதேனும்
நோய் பிடித்திருக்கலாம்
சூரியக்கீற்று எழு எத்தனிக்கும்
வேளையில் ஊர் தாண்டி வந்துவிட்டதாய்
புலம்பி எழுகிறார் முன்னிருக்கை பயணி
தூக்கும் கலைந்துவிட்ட வெறுப்பில்
அவரை திட்டி வைத்தேன்
அவர் எப்போது இறங்கினார் என்று
தெரியாத தூக்கம் கலைந்த போது
என்னூரும் தாண்டியிருந்தது
அடுத்த ஊரில் இறங்க வேண்டிய
பின்னிருக்கை பயணி
இப்போது என்னை சபித்துக்கொண்டிருக்கிறார்
***
-- பிரேம்குமார் சண்முகமணிவலைப்பூ : http://premkumarpec.blogspot.comஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு
Saturday, January 3, 2009
puthu kavithai
Posted by ஆகாய நதி at 9:06 AM 0 comments
Subscribe to:
Posts (Atom)